மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட சொன்ன கணவனின் காதலி : கொடூர கொலையின் பின்னணி!!

861

கொடூர கொலை

இந்திய தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து மனைவியை கொலை செய்த விவகாரத்தில் கணவனின் காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட தீபிகாவின் கணவர் விக்ரம் சவுகானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 35 வயது ஷெஃபாலி பாசின் என்பவரையே பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இவர் 6 மாத கர்ப்பிணி என விசாரணையில் தெரியவந்துள்ளது. தீபிகாவின் கொலை தொடர்பாக கணவர் விக்ரமுடன் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சம்பவத்தில் ஷெஃபாலியின் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது.

தீபிகாவை குடியிருப்பின் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய ஆலோசனை வழங்கியவரும் ஷெஃபாலி என தெரியவந்துள்ளது. மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் விக்ரம் மற்றும் ஷெஃபாலி ஆகிய இருவரும் தொலைபேசியில் உரையாடியதும் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

ஷெஃபாலியுடன் விக்ரமிற்கு நெருங்கிய உறவு இருப்பதை தீபிகா அறிந்துகொண்ட பின்னர் இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 27 ஆம் திகதி தீபிகா கொல்லப்படுவதற்கு முன்னர் ஷெஃபாலியுடன் விக்ரம் கொலைக்கான திட்டம் வகுத்துள்ளது, அவர்களின் தொலைபேசி உரையாடலில் பதிவாகியுள்ளது.

பின்னர், 8-வது மாடியில் உள்ள தங்கள் குடியிருப்பின் பால்கணியில் தீபிகாவை இழுத்துச் சென்ற விக்ரம் அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் தமது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாருக்கும் உறவினர்களிடத்திலும் நாடகமாடியுள்ளார்.

ஆனால் அண்டை விட்டாரின் வாக்குமூலத்தில் இருந்து விக்ரம் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் விக்ரத்தின் கைகளில் காணப்பட்ட விரல் காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. தொடர்ந்து மனைவியை கொலை செய்தது தாம் என விக்ரம் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஓராண்டாக ஷெஃபாலியை விக்ரம் காதலித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரியாமல் இருவரும் ஒன்றாக 5 நாள் சுற்றுலாவுக்கும் சென்று வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.