தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் திருமணத்தை கலாய்த்த பெண் அமைச்சர்!!

728

தீபிகா படுகோன்-ரன்வீர் சிங்

ஹிந்தி நடிகை தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை வெளியிடாததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல் செய்துள்ளார்.

இத்தாலியில் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனுக்கும், நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கொங்கனி முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 40 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களது திருமணம் தொடர்பான எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. அதாவது எவருக்கும் திருமணத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இருவரின் ரசிகர்களும் புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என்று காத்திருந்தனர். ஆனால், ஒரு புகைப்படம் கூட வெளியாகாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ரசிகர்கள் இவ்வாறுதான் காத்திருக்க வேண்டும் என்று கிண்டல் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் எலும்புக்கூடு ஒன்று மர நாற்காலியில் அமர்ந்திருக்கிறது. இது ரசிகர்கள் வெகுநேரம் காத்திருக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் உள்ளது.