காட்டுக்குள் சிதைக்கப்பட்டு உயிரிழந்த மாணவி : 5 முக்கிய சாட்சிகளிடம் ரகசிய வாக்குமூலம்!!

484

சிதைக்கப்பட்டு உயிரிழந்த மாணவி

தருமபுரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி காட்டுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய சாட்சிகளிடம் நீதிபதி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற மாணவியை , அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் வாயில் துணியை அடைத்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ், சதீஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வழக்கின் முக்கிய சாட்சிகளாக உள்ளவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முக்கிய 5 பேரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளார்.