செல்பி மோகம் : பொதுவெளியில் ஆடைகளை களைந்து நிர்வாண நடனம்!!

652

செல்பி மோகம்

டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் திருநங்கைகள் 4 பேர் திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நடனமாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யமுனை நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள சிக்னேச்சர் என்ற புதிய பாலத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 4ம் தேதியன்று திறந்து வைத்தார். பாலம் திறக்கப்பட்டதிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆபத்து விளைவிக்கும் வகையில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். அவர்களை தீவிரமாக கண்காணித்து பொலிஸாரும் கைது செய்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருநங்கைகள் 4 பேர் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆடைகளை களைந்து, புதிய பாலத்தில் நிர்வாணமாக நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியது.

இந்த வீடியோ பொலிஸார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, 4 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ எந்த நாளில் எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.