முகேஷ் அம்பானி மகளுக்கு காத்திருக்கும் திருமண பரிசு இதுதான் : எத்தனை கோடி மதிப்பு தெரியுமா?

629

இஷா – ஆனந்த்

முகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் அவரின் வருங்கால கணவர் ஆனந்துக்கு ரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா பரிசாக வழங்கப்படவுள்ளது.

இஷா – ஆனந்த் திருமணம் அடுத்த மாதம் 12-ஆம் திகதி நடைபெறவுள்ளது. திருமணத்துக்குப் பிறகு மும்பை ஒர்லி கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற கிலிட்டா பங்களாவில் புதுமணத் தம்பதி குடியேறுகின்றனர்.

கிலிட்டா கட்டடம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு இந்தக் கட்டடத்தை ரூ.450 கோடி கொடுத்து ஆனந்த் பிரமாலின் தந்தை அஜே பிரமால் வாங்கினார். தற்போது, இது ஐந்து அடுக்கு பங்களாவாக மாற்றப்பட்டுள்ளது.

அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ள இந்தப் பங்களா 50,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. பிரமிக்க வைக்கும் உள் அலங்கார வேலைப்பாடுகளுடன் பங்களா புதுமணத் தம்பதிக்காகத் தயராகி வருகிறது. பங்களாவின் உள்ளேயே பணியாளர்களுக்கு குடியிருப்புகள் அமைந்துள்ளன.

டிசம்பர் 1-ம் திகதி புதுமனை குடிபுகும் விழா நடைபெறும் நிலையில், இந்தப் பங்களாவை மகன் ஆனந்த் மற்றும் மருமகள் இஷாவுக்கு திருமணப்பரிசாக அஜே பிரமால் வழங்கவுள்ளார்.