தமிழகத்தில் பலரின் உயிரை வாங்கிய கஜா புயல் : அனைவரையும் கண்கலங்க வைத்த புகைப்படம்!!

897

கண்கலங்க வைத்த புகைப்படம்

தமிழத்தில் கஜா புயல் காரணமாக பெண் ஒருவர் மீது மரம் சாய்ந்ததால், அவர் பரிதாபமாக இறந்து கிடக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று நள்ளிரவு தமிழகத்தை உலுக்கிய கஜா புயல் காரணமாக தற்போது வரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முக்கியமாக, நாகை, வேதாரண்யம் போன்ற பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, நடுத்தெருவில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்திருப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் அருகே மழையின்போது மரத்தடியில் நின்ற – துப்புரவு பணியாளர் மீது மரம் சாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் அருகே மழையின்போது பெண் துப்புரவு பணியாளர் மரத்தடியில் நின்று கொண்டிருந்த போது தீடீரென்று அந்த மரம் சாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது மரம் விழுந்து கிடக்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது