ஆண்கள் இல்லாத வீடு : மாமியாரின் இறுதிச்சடங்குகளை தனியாக நின்று நடத்திய மருமகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

1324

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் மாமியார் உயிரிழந்த நிலையில் மருமகளே தனியாக அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மர் நகரை சேர்ந்த நீலம் (70) என்பவர் தனது மகன் மருமகள் யல்பனாவுடன் வசித்து வந்தார். நீலமின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். அதே போல யல்பனாவின் கணவர் கஜேந்திரா 15 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். யல்பனாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நீலம் இரு தினங்களுக்கு முன்னர் உடல் நடக்குறைவால் இறந்துவிட்டார். ஆண்கள் இல்லாத வீடு என்பதால் தனது மாமியாருக்கு தனது மகள்களுடன் சேர்ந்து இறுதிச்சடங்குகளை செய்தார் யல்பனா.

இது குறித்து அவர் கூறுகையில், என் மாமியார் நீலம் என்னை சொந்த மகளை போல தான் பார்த்து கொண்டார். அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றியது பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.