பரபரப்புக்கு நடுவே தொடங்கும் பிக்பாஸ் 2! உறுதியான தகவல்

1100

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே வித்தியாசமான பார்வை அதன் மீது திரும்ப வைத்தது. இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் சிலருக்கு பயமாக இருக்கும்.

ஒருவேளை நாம் கலந்துகொண்டால் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமோ என்ற எண்ணம் பிரபலங்களுக்கும் இருக்கிறது. தமிழில் தொடங்கிய பின் தெலுங்கில் 70 நாட்களை கொண்டு நிகழ்ச்சி தொடங்கியது.

முதல் சீசனை ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அடுத்த சீசனை படத்தின் கால்ஷீட் காரணமாக அவர் தொகுத்து வழங்கவில்லை.

நடிகர் நானியின் பேர் அடிபட்டுவந்தது. தற்போது நிகழ்ச்சி குழுவே இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் ஹைதராபாத் லோனாவாலா பகுதியில் ஷூட்டிங் நடைபெறுகிறதாம்.

மேலும் தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறதாம்.