படுக்கை அறையில் எலுமிச்சை! அற்புதங்கள் இதோ!!

1818

ஒரு துண்டு எலுமிச்சை பழத்தினை படுக்கை அறையில் வைப்பதால், நடக்கும் அற்புதத்தை பார்ப்போம்.படுக்கையறையில் எலுமிச்சை வைப்பதால் நாம் தூங்கும் போது எலுமிச்சையின் நறுமணத்தை சுவாசித்து உறங்குவதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

இதனால் நினைவுத்திறன் அதிகரிப்பதோடு, மனம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அதுமட்டுமன்றி புத்துணர்ச்சியுடன் காலைப் பொழுதை தொடங்கலாம்.

எலுமிச்சை நோய்த்தொற்றுகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே இதை படுக்கை அறையில் வைப்பதால், அறையில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுப்பதுடன் கிருமிகளையும் அழிக்கிறது.உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சையை வெட்டி வைக்க வேண்டும்.

ஏனெனில் அதன் வாசனை ரத்த அழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் கிராம்பை குத்தி வைத்து, அதை படுக்கும் அறையில் வைத்தால், வீட்டில் எறும்புகள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.