கர்ப்பிணியாக இருக்கும்போது பலமுறை துஸ்பிரயோகம் செய்யப்பட்டேன் : இளம் தாயாரின் கண்ணீர் வாக்குமூலம்!!

1122

கண்ணீர் வாக்குமூலம்

பிரித்தானியாவின் லங்காஷயர் மாவட்டத்தில் இளம் தாயார் ஒருவர் கர்ப்பிணியாக இருந்த காலகட்டத்தில் காதலனால் ஏற்பட்ட துயரம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தமக்கு ஏற்பட்ட துயரம் எஞ்சிய பிரித்தானிய தாய்மார்களுக்கு எச்சரிக்கை பாடம் என்பதாலையே இதை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் தற்போது சிறையில் உள்ளார். லங்காஷயர் மாவட்டத்தில் குடியிருக்கும் 32 வயதான மரியா ஸ்மித் என்பவரே காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட அந்த இளம் தாயார். தற்போது 48 வயதாகும் டேரன் சார்லஸ் பெல்டன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக மரியா ஸ்மித் கர்ப்பமானார்.

2017 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய பெல்டன் வன்கொடுமை சட்டத்தின் கைதாகி சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.

மரியா ஸ்மித் கர்ப்பிணியாக இருந்த காலகட்டத்தில் பெல்டனின் நடவடிக்கை தமக்கு கடும் ஏமாற்றத்தை மட்டுமல்ல, உயிர் பிரியும் வலியையும் தந்தது என மரியா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

வாரத்தில் பலமுறை தம்மை கொடூரமாக தாக்கியுள்ள பெல்டன், உதைத்தே வயிற்றில் இருக்கும் குழந்தையை வெளியேற்றிவிடுவேன் எனவும் பலமுறை மிரட்டியுள்ளார்.

இதனாலையே தமக்கு ஏற்பட்ட துஸ்பிரயோகங்களை தாம் வெளியே சொல்ல பயப்பட்டதாகவும் மரியா தெரிவித்துள்ளார்.

பெல்டனின் குழந்தையை சுமக்கும் தம்மை அவர் கனிவுடன் கவனிக்க வேண்டியதை மறுத்து, தொடர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியது ஏற்க மெடியவில்லை என கூறும் மரியா,

இந்த விவகாரத்தை தமது மகளுக்கு ஒரு நாள் கண்டிப்பாக கூறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நண்பர் மூலம் அறிமுகமாகியுள்ளார் பெல்டன். அதன்பின்னர் அந்த நட்பு காதலாகி பின்னர் இருவரும் சேர்ந்து வாழும் முடிவுக்கும் வந்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி பெல்டனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக கூறும் மரியா, தொலைபேசி உரையாடல் நடந்தால் கூட யாருடன் பேசுகிறாய் என்ற கேள்வியுடன் பெல்டன் தொல்லை தரத் துவங்கியதாக மரியா தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பெல்டன் வெளியே செல்லும்போது மரியாவை குடியிருப்பில் வைத்து பூட்டிவிட்டு செல்லத்துவங்கியுள்ளார்.

4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது வாரத்தில் 3 முறைகூட உறவு வைத்துக் கொள்ள நிர்பந்தித்துள்ளார்.

மறுத்தால் கடுமையாக தாக்குவது மட்டுமின்றி, பலாத்காரம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இது தொடர்ந்து 3 மாதம் நீடித்துள்ளது. அப்போதெல்லாம், தமது பிறக்காத குழந்தைக்கு ஏதும் நேரக் கூடாது என்றே மரியா மன்றாடியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெல்டன் கதவை மூட மறந்து வெளியே சென்ற ஒரு நாள், மரியா தமது உடமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

3 தினங்களுக்கு பின்னர் பொலிசாருக்கு தகவல் அளித்ததாக கூறும் மரியா, ஒருவார கால கண்காணிப்புக்கு பின்னர் பொலிசார் பெல்டனை கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் பெல்டன் குற்றவாளி என நிரூபணமான நிலையில் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.