காதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு : எலிகளுக்கு இரையான காதலனின் உடல்!!

813

எலிகளுக்கு இரையான காதலனின் உடல்

கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

23 வயதான வைத்தீஸ்வரன் என்பவர் கணணி அறிவியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். வைத்தீஸ்வரனுக்கு, தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்த பாண்டியன் மகள் ரத்தினபிரியா என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் போனில் பேசிவந்த இவர்கள், நாளடைவில் வெளியில் ஒன்றாக சேர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து காதலன் வந்துள்ளான். கடந்த 9-ந்தேதி ரத்தினபிரியா செல்போனில் நீண்ட நேரமாக வைத்தீஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதை பார்த்த ரத்தினபிரியாவின் தாய் இந்திரா, ஏன் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறாய் என கண்டித்தார். இதில் மனமுடைந்த ரத்தினபிரியா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த வைத்தீஸ்வரன் ரத்தினபிரியாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து காதலி இறந்த வேதனையில் வைத்தீஸ்வரன் இரவு வீட்டுக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வைத்தீஸ்வரனை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்தீஸ்வரன் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வைத்தீஸ்வரனை மீட்டு மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைத்தீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு வந்தனர்.

அப்போது அவரது உடலின் பல இடங்களில் எலிகள் கடித்து குதறி இருந்தது. இதை பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், பொலிசாரிர் சொன்னதையடுதது உறவினர்கள் கலைந்து சென்றனர்.