200 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள்.. பலரை சீரழித்து வெளிநாட்டில் விற்கும் மோகன் : அதிரவைக்கும் தகவல்கள்!!

1598

பலரை சீரழித்த மோகன்

200 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் வைத்து கொண்டு அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காஸ்டிங் மோகன் மீது இரண்டு பெண்கள் பொலிஸ் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை அடையாரை சேர்ந்த மோகன் (37). சினிமா துறையில் காஸ்டிங் டைரக்டராக உள்ளார். மேலும் இவர் தனது வீட்டின் முதல் மாடியில் மொடலிங் ஏஜென்சி ஒன்று நடத்தி வருகிறார். அந்த ஏஜென்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஏஜென்சியின் நடவடிக்கைகள் குறித்து தகவல் பரிமாறும் வகையில் மோகன் வாட்ஸ்அப் குழு ஒன்று தொடங்கி அதில் அனைத்து இளம் பெண்களையும் சேர்த்துள்ளார். சில பெண்களை தேர்வு செய்து தனியாக அழைத்து இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதுபோல் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மொடலிங் வாய்ப்பு தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று மதுபானம் கொடுத்து தனது ஆசையை தீர்த்து வந்துள்ளார்.

மோகனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், மோகன் படுக்கை அறையில் அவருக்கு தெரியாமல் மைக்ரோ கேமராவை ரகசியமாக அமைத்து கடந்த 3 மாதங்களாக நடந்த சம்பவங்களை படம் பிடித்துள்ளார்.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மோகன் மொடலிங் பெண்களுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் மற்றும் 30க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகியது.

ஆனால் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் மோகன் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வரவில்லை. ஏன் என்றால் மோகன் சினிமா மற்றும் பெரிய விளம்பர நிறுவனங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக அவரது மாடலிங் ஏஜென்சியில் உள்ள 200 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் அவரிடம் உள்ளது. இதனாலேயே அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்காமல் தயங்கி வந்தனர்.

இந்நிலையில், மோகனால் பாதிக்கப்பட்ட சென்னை அடையாரை சேர்ந்த ஹாசினி (21), முகப்பேரை சேர்ந்த காயத்ரி (20) ஆகிய 2 இளம் பெண்களும் நேற்று பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் தனித்தனியாக புகார் அளித்தனர்.

ஹாசினி புகாரில் கூறியிருப்பதாவது, நான் எம்.காம் படித்துவிட்டு கடந்த 2 வருடங்களாக அடையாரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். சினிமா துறையில் உள்ள “காஸ்டிங் டைரக்டர்” மோகன் என்னை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு சினிமா துறையில் வேலை வாங்கி தருவதாக அழைத்தார். அதன்படி நான் நேரில் சென்றபோது வாய்ப்பு வாங்கி தருவதாக பலமுறை அலைக்கழித்தார்.

பின்னர், அவர் என்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால்தான் நான் உனக்கு வேலை வாங்கி கொடுப்பேன் என்று கூறினார். நான் அதற்கு மறுத்தேன். பின்னர் வேறு வழியின்றி என் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.

இந்த விஷயம் இத்துடன் நில்லாமல், அவர் என்னை பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவர் என்னை தன்னுடன் நெருக்கமாக இருக்குமாறு கட்டாயப்படுத்தவும் செய்தார். இதற்கிடையே, மோகனின் அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை பார்த்து அதிர்ந்து போனேன்.

எங்கே எனது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவாரோ என்ற பயத்தினால் இந்த புகாரை அளிக்கிறேன். வேறு சில ஆதாரங்களின் மூலமாக, அவர் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளிநாட்டில் தனது ஆட்களிடம் பணத்திற்கு விற்பதாக கேள்விப்பட்டேன். மோகனுக்கு கடுமையான தண்டனை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.