பரிகார பூஜையால் நடந்த விபரீதம் : தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ராணுவ வீரரின் மனைவி!!

845

ராணுவ வீரரின் மனைவி

ஈரோடு மாவட்டத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். ராணுவ வீரராக பணியாற்றி வரும் சுரேஷ், கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக கோபி பகுதியை சேர்ந்த சாவித்ரி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சாவித்ரியின் பெற்றோர் வீட்டில் பரிகார பூஜை நடத்தப்பட்டுள்ளது.

அந்த பூஜையின்போது சாவித்திரியும் உடன் இருந்துள்ளார். அன்றிலிருந்தே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு அல்லாமல் ஒரு வித அச்சத்துடன் இருந்து வந்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாவித்ரி, நேற்று முன்தினம் இரவு தூக்கு போட்டு கொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய கணவரின் பெற்றோர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருமகளின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சாவித்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.