ஒரே நேரத்தில் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி : மாணவன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!

1076

5 மாணவிகள் தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசம்பட்டு அரசு பள்ளியைச் சேர்ந்த கல்விபயின்று மாணவிகளை ஒரு மாணவன் ஐந்து பேரையும் காதலிப்பதாக கூறி கடிதம் எழுதி வைத்திருந்துள்ளான்.

இதனை பார்த்த சக மாணவிகள் கிண்டல் செய்த வேளையில் இதனால் மன உளைச்சல் அடைந்த 5 மாணவிகள் அரளிவிதை சாப்பிட்டு தற்கொலை முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 5 மாணவிகளும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பள்ளியிலும், அக்கிராமத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியாக கூறப்படுகின்றது.