பொய்யான பாலியல் புகார் அளித்து களங்கம் ஏற்படுத்திவிட்டார் : நடிகை ராணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!!

724

நடிகை ராணி

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நந்தினி தொடரில் நடித்து வரும் நடிகை ராணி, சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகர் சண்முகராஜன் என்பவர் மீது பாலியல் புகார் அளித்தார். இதுகுறித்து பொலிசில் புகார் அளித்த இவர், பின்னர் சண்முகராஜன் மன்னிப்பு கோரியதால் அதனை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகை ராணி, தன் மீது பொய் புகார் கொடுத்து தன் பெயரை களங்கப்படுத்தி விட்டதாக நடிகர் சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக, ராணியிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான பதிலை ராணி இது வரை வழங்கவில்லை.

இந்நிலையில் நடிகர் சங்கம், நடிகர் சண்முகராஜனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அதில், நடிகை ராணியின் பாலியல் புகார் குறித்து, 09.12.18 அன்று நடந்த செயற்குழுவில் தாங்கள் நேரில் வந்து விளக்கம் அளித்தீர்கள்.

தங்கள் மீது, காழ்ப்புணர்ச்சியால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது என்பதை தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்துகொண்டோம். இதுவரை தனிப்பட்ட முறையில் நற்பெயர் பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த அசம் பாவிதத்துக்கு நடிகர் சங்கம் வருந்துகிறது.

அதே நேரம், இனிவரும் காலத்தில் நடிகை ராணி, திரைப்படத்திலோ, தொலைக்காட்சித் தொடரிலோ நடிக்க வரும்போது, அவர் தங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டால் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.