4 வது மாடியிலிருந்து குதித்து செய்தி வாசிப்பாளர் தற்கொலை!!

510

ராதிகா கௌஷிக்

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டார் 77 பகுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் 4 வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகா கௌஷிக் ( Radhika Kaushik) என்ற பெண்மணியே வியாழக்கிழமை இரவு அவரது அலுவலகத்தின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு 3:30 மணியளவில் இறந்துவிட்டார்.

ஆரம்ப விசாரணையின் போது, ​​சம்பவத்தின் போது, ராதிகா கௌஷிக் ​​ Rahul Awasthi என்பவருடன் இருந்ததாக தகவல் கூறப்படுகின்றன. இது தொடர்பாக Rahul Awasthi கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப விசாரணைகள் இருவரும் அபார்ட்மெண்டின் பால்கனியில் இருந்ததாக கூறப்பட்டதுடன், அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் Rahul Awasthi கழிவறைக்கு சென்றபோது ராதிகா கட்டிடத்தின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து விட்டதாக கூறப்படுகின்றது.

பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக நொய்டா பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.