திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி : கணவனின் இரக்கமற்ற செயல்!!

1012

புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஆந்திர மாநிலத்தின் குப்பத்தை சேர்ந்தவர் சந்தியா (18). இவர் வேலு என்ற இளைஞரை காதலித்து வந்தார்.  இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் இருவரும் ஒரே சாதி என்பதால் திருமணத்துக்கு குடும்பத்தார் சம்மதித்தனர்.

இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்னர் வேலு – சந்தியா திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் கூடுதல் வரதட்சணை கேட்டு சந்தியாவை வேலு கொடுமைப்படுத்த தொடங்கினார். பைக் வாங்க ரூ.50,000 வேண்டும் என மனைவியை சமீபத்தில் அடித்து துன்புறுத்தியுள்ளார். காதல் கணவரின் செயலால் மனமுடைந்த சந்தியா விஷம் குடித்தார்.

இதையடுத்து குடும்பத்தார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு சந்தியாவை ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

அப்போது ஆம்புலன்சில் வேலுவும் இருந்த நிலையில் வழியிலேயே சந்தியா உயிரிழந்தார். இதையடுத்து வேலு, ஆம்புலன்சில் இருந்து கீழே குதித்து தப்பியோடினார். இதையடுத்து ஆத்திரமடைந்த சந்தியாவின் உறவினர்கள் வேலுவின் வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சந்தியாவின் சடலத்தை அவர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய வேலுவை பொலிசார் தேடி வருகிறார்கள்.