3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த இளைஞன் : நடுரோட்டில் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற மக்கள்!!

288

குழந்தை பலாத்காரம்

தமிழகத்தில் மூன்று வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை பொதுமக்கள் அடித்து நடுரோட்டில் இழுத்து வந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை விழுப்புரம் அருகே உள்ள தோகைபாடி கிராமத்தின் மூன்று வயது சிறுமியை இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதை அறிந்த ஊர்மக்கள் ஆத்திரத்தில் அந்த நபரை அடித்துள்ளனர், அதன் பின் ரோட்டில் சுமார் 3 கி.மீற்றர் தூரம் வரை அடித்து உதைத்தபடி இழுத்து வந்துள்ளனர்.

அதன் பின் இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவர அவர்கள் இந்த நபரை பிடித்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பலரும் இவனுக்கு தூக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.