மனைவியின் தங்கையை திருமணம் செய்த கணவன் : பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக்கொலை!!

559

வெட்டிக்கொலை

நெல்லையில் மனைவியின் தங்கையை திருமணம் செய்த நபர் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவருடைய மகன் முத்து ராமச்சந்திரன் (36). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த மாரிசெல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாரிசெல்வி, கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இதற்கிடையில் முத்து ராமச்சந்திரனிற்கு மனைவியின் தங்கை ரேவதியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் பல இடங்களுக்கு சென்றுவந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, மாரிசெல்வியின் குடும்பத்தார் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கம்போல முத்து ராமச்சந்திரன் வேலைக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ரேவதியின் தம்பி வள்ளிமணிகண்டன், கையில் வைத்திருந்த அரிவாளுடன் முத்து ராமச்சந்திரனை விரட்டி வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனை பார்த்து பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.