கடித்து குதறிய முதலை : 2 நாட்களாகியும் இரைப்பைக்குள் இருக்கும் பெண்ணின் உடல் பாகங்கள்!!

780

கடித்து குதறிய முதலை

இந்தோனேஷியாவில் செயல்பட்டு வந்த முத்து பண்ணைக்குள் இருந்த முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

700 கிலோ எடை கொண்டிருக்கும் மெரி என்ற முதலைக்கு 44 வயதாகும் டீசி டுவோ என்ற பெண்மணி உணவு கொடுக்க சென்றபோது தவறுதலாக வேலிக்குள் விழுந்துள்ளார்.

இதில், முதலை அப்பெண்ணை கடித்து குதறியதில் உயிரிழந்துள்ளதார். இவர் இறந்து அடுத்தநாள் கழித்துதான் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு விரோதமாக இந்த முதலை வளர்க்கப்பட்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணின் உடல் பாகங்கள் இன்னமும் 4.4 மீட்டர் நீளம் உள்ள அந்த முதலையின் இரைப்பைக்குள் இருக்கக்கூடும் என அதிகாரிகள் நம்புகின்றனர். இந்தப் பண்ணை மற்றும் முதலை இரண்டுக்கும் உரிமையாளரான ஒரு ஜப்பானியரை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.