ஆமாம்.. நானும் தேடி கொண்டிருக்கிறேன் : மனம் திறந்த நடிகை கவுதமி!!

1247

நடிகை கவுதமி

மக்களுக்காகச் செயல்படும் தலைவனை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று நடிகை கவுதமி கூறியுள்ளார்.

பிரபல நடிகை கவுதமி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் ஒவ்வொன்றாக இப்போது வந்துகொண்டிருக்கின்றன.

ஜெயலலிதா மரண விடயங்கள் பற்றி வெளிவருவதைப் பார்க்கும் போது, சிபிஐ விசாரணை தேவை என்பதையே இவை வலியுறுத்துகின்றன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதலானோரின் செயல்பாடுகளை மட்டும் பார்க்காமல், மற்றவர்களின் செயல்பாடுகளையும் பார்க்கவேண்டும். ஆமாம், மக்களுக்காக உழைக்கிற, மக்களுக்கான தலைவனை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.