வெளிநாட்டில் காதல் மனைவி : உள்ளூரில் வேறு திருமணம் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் செய்த செயல்!!

958

பாதிக்கப்பட்ட பெண்

காதல் கணவனை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மலேசியப் பெண் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.

இவர் சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவன ஓட்டுநராக பணியாற்றியுள்ளார். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய துர்காதேவி ரமீஸ் என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து மூன்று வருடம் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான பெருகவாழ்ந்தானுக்கு வந்த ராஜ்குமாருக்கு, அவர் குடும்பத்தினரால் பார்த்துவைக்கப்பட்ட வேறொரு பெண்ணுடன் நேற்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர்.

இதையறிந்த துர்காதேவி சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலம் திருவாரூர் எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் அளித்துள்ளார். பின்னர் இந்தியா வந்த அவர் நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்த திருமண மண்டபத்துக்குள் பொலிசாருடன் நேரில் சென்றுள்ளார்.

அங்கு ராஜ்குமார் இல்லாத நிலையில், அங்கிருந்த உறவினர்கள், ராஜ்குமாருக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த துர்காதேவி தன் கணவனை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர் நிர்மல்ராஜிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

அதைப் பெற்றுக்கொண்ட நிர்மல்ராஜ் நீதிமன்றத்தின் மூலம் அணுகும்படி துர்காதேவியிடம் கூறினார். இதற்கான இலவச சட்ட உதவிகளை துர்காதேவிக்கு பெற்று தரவும் பொலிசுக்கு உத்தரவிட்டார்.