8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த உலகின் இளம் வயது கொலைகாரன்!

603

 

உலகளவில் இளம் வயதில் சீரியல் கில்லர் என அழைக்கப்படும் அமர்ஜித் சடா, தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டு புது வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.தனக்கு, 8 வயது இருக்கையில் அமர்ஜித் 3 குழந்தைகளை கொலை செய்துள்ளான். 1998 ஆம் ஆண்டு பீகாரின் முசாரி என்ற கிராமத்தில் பிறந்த இச்சிறுவனின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி ஆவார்.

2006 ஆம் ஆண்டு இச்சிறுவன் முதல் கொலை செய்துள்ளான். தனது உறவுக்காரின் 6 மாத குழந்தையை கொலை செய்துள்ளான். அதன்பின்னர், சில மாதங்கள் கழித்து தனது சொந்தத் தங்கையையே கொலை செய்துள்ளான்.ஆனால், இது தங்களின் குடும்ப பிரச்சனை என சிறுவனின் பெற்றோர் இதனை மூடி மறைத்துள்ளனர்.

அதன்பின்னர், அருகில் வசிப்பவரின் 6 மாத குழந்தையை கொலை செய்துள்ளான். இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கூறப்பட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.மேலும், கொலைக்கான காரணமாக, நான் பிஸ்கேட் கேட்டேன், ஆனால் எனக்கு கொடுக்காமல் என்னை பார்த்து சிரித்தது, இதனால் கொலை செய்தேன் என இந்த 8 வயது சிறுவன் அளித்த பதில் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்தது.

இதனைத் தொடர்ந்து, இச்சிறுவனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், Conduct Disorder எனப்படும் நடத்தை பிரச்சனை இருக்கிறது என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது தன்னிடம் நடந்துகொள்ளும் விதம் மற்றும் அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணுதல் பிரச்சனை இருந்துள்ளது.

இந்திய சட்டத்தின் படி, மிக சிறிய வயதிலான இந்த சிறுவனுக்கு தகுந்த தண்டனை வழங்கலாகாது என்பதால் இச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

அதன்பின்னர் இச்சிறுவன் என்ன ஆனான் என்பது குறித்து யாரும் அறியப்படாத நிலையில், 18 வயதை எட்டியுள்ள இவன், தனது பெயரை Samarjit என மாற்றிக்கொண்டு, குழந்தைகள் இல்லத்தில் புது வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.