அதிர்ச்சி சம்பவம்
கடந்த 21ம் தேதி சென்னையில் உள்ள பெருங்குடி குப்பை மேட்டில் ஒரு சாக்குப்பை கண்டெடுக்கப்பட்டது. அதில் பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை மட்டும் இருந்ததால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் போலீஸில் தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் நீண்டநாள் இதுகுறித்து விசாரித்து வந்ததில் இன்று ஆதாரம் கிடைத்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றும் சந்தியா என்ற பெயர் கொண்ட இவர் அவரது கணவர் எஸ்.ஆர். பாலகிருஷ்ணனுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.
துணை நடிகையான இவர் காதல் இலவசம் என்ற படத்தையும் இயக்கியுள்ளாராம். சந்தியாவிற்கு வேறொரு ஆணுடன் கள்ளக்காதல் இருந்ததால் அவரது கணவரே கொலை செய்துள்ளார்.