உடல் கொழுப்பை குறைக்க சத்திரசிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் : கண்விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

1308

காத்திருந்த அதிர்ச்சி

பெண் ஒருவர் தனது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவரின் மூக்கு மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மரிலா என்ற பெண்ணுக்கு தற்போது 41 வயதாகிறது. 19 வயதில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து அவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், நான் அப்போது என் குடும்பத்துடன் பெரு நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது நான் கொழு கொழுவென குண்டாக இருந்ததால் என்னை பலரும் கிண்டல் செய்வார்கள்.

இதையடுத்து அங்குள்ள புகழ்பெற்ற மருத்துவரிடம் liposuction எனப்படும் உடலில் அதிக அளவில் உள்ள கொழுப்புகளை அகற்றுவதற்கு செய்யப்படுகிற அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தேன்.

சிகிச்சை முடிந்து கண்விழித்து கண்ணாடியை பார்த்த போது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் கொழுப்புகளை அகற்றும் சிகிச்சையுடன் சேர்ந்து என் மூக்கை மாற்றும் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது.

மூக்கில் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. என் மூக்கு எப்போதும் அழகாக இருக்கும், ஆனால் இந்த சிகிச்சைக்கு பின்னர் மிகவும் கோரமாக மாறியிருந்தது. இது என் வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாத வலி என கூறியுள்ளார்.