எந்த ராசிக்காரர்கள் எந்த வகையான ராசிக்கல் அணியலாம்?

702

கைவிரல்களில் அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து வாழ்க்கையை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறது என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.

மேஷம்:ராசிக்கல் பவளம் ஆகும், தீய சிந்தனைகளைநம் மனதில் இருந்து வெளியேற்றும். தொழில் முறையில் சிறந்து விளங்குவதற்கும், நல்லறிவு மற்றம் வாழ்வில் அதிர்ஷ்டங்களை கொடுக்கும்.

ரிஷபம்:ராசிக்கல் பவளம். ஆண்- பெண் உறவை வலுப்படுத்தும். வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும்.

மிதுனம்:ராசிக்கல் மரகதம். தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும், மாணவர்களுக்கு நல்ல கல்வி மற்றும் தொழில் வளத்தை கொடுக்கும்.

கடகம்:ராசிக்கல் முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். மிகுந்த அதிர்ஷடத்தை கொடுத்து வாழ்வில் வெற்றியை தரும்.

சிம்மம்:ரூபிகல் அணியவேண்டும். சிங்கத்தை அடையாளமாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களின் அதிபதி சூரியன் ஆகும்.

கன்னி:மரகதம் கற்கள் அணியலாம். சிறந்த கல்வியைக் கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும்.மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

துலாம்:வைரகற்கள் அணிலாம். நெஞ்சில் உறுதி மற்றும் தன்னம்பிக்கையை தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:பவளகற்கள் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும்.திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:நீலக்கல் அணியலாம். நல்ல பண்புகளைக் கொடுக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும் . ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையைப் போக்கக் கூடியது.வம்பு, வழக்கு இருந்தால் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.

கும்பம்:செவ்வந்திக் கல் அணியலாம். இது அதிர்ஷ்டத்தை வழங்கும் மற்றும் ஒருவரைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலைத் தடுத்து பாதுகாப்பளிக்கும்.

மீனம்:மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம், செல்வ விருத்தியைக் கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும்.நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.