பெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை!

502

இந்தியாவில் பெற்ற மகளையே தனது நண்பர்களுடன் சேர்ந்து, நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், சிதாபூர் மாவட்டத்தில் உள்ள கம்லாபூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், தனது மகளுடன் கடந்த 15ஆம் திகதி கண்காட்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அவர் தனது நண்பர் மான் சிங் என்பவருக்கு போன் செய்து கண்காட்சிக்கு வருமாறு அழைத்துள்ளார்.அதன் பின்னர், கண்காட்சிக்கு வந்த மான் சிங்குடன் ஒரே இருசக்கர வாகனத்தில் மற்றொரு நண்பரான மீரஜ் என்பவரின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.

இந்நிலையில், இரவு வேளையில் எதற்கு அங்கு செல்ல வேண்டும் என தந்தையிடம் மகள் கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு அந்த தந்தையோ, உடனே சென்றுவிட்டு திரும்பிடலாம் என்று கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி அந்த இளம்பெண்ணும் அவர்களுடன் சென்றுள்ளார்.

மீரஜின் வீட்டிற்கு சென்றதும் அப்பெண்ணை அவர்கள் ஓர் அறைக்குள் தள்ளினர். பிறகு மான் சிங்கும், மீரஜும் அப்பெண்ணை மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.அதன் பின்னர், பெண்ணின் தந்தையும் அவர்களுடன் இணைந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, மறுநாளும் அந்த அறைக்குள் அடைத்து வைத்து அவர்கள் அப்பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது தனது வீட்டிற்கு தப்பி வந்த அப்பெண், தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் உடனடியாக பொலிசில் புகார் அளித்தார். அதன் பின்னர், வழக்குப்பதிவு செய்த பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் மீரஜ் கைது செய்யப்பட்டார்.

தந்தையும், மான் சிங்கும் தப்பி விட்டதால் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, மான் சிங் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.குறித்த பெண் திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.