தாய்ப்பால் ஊட்டும் போது திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட வீடியோ: ஒரு தாயின் வேதனை!!

724

கனடாவில் நிக்கோல் பிராசர் எனும் பெண் மருத்துவமனையில் தனது 10 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கனடாவில் உள்ள Cape Breton Regional மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் நோயாளிகளுக்கான காத்திருப்பு பகுதியில் இருந்து காத்துக் கொண்டிருந்த நிக்கோல் ப்ராஸர் எனும் பெண் தனது 10 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திருக்கிறார்.

இதனை அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் தனது மொபைலில் படம்பிடித்துக் கொண்டிருப்பதாக, அவர் அருகில் இருந்த மற்றொரு பெண் கூறியிருக்கிறார்.என்ன செய்வதென்று தெரியாத நிக்கோல் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை உதவிக்கு அழைக்க, அவர்களோ இந்த விடயத்தில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என அலட்சியப்படுத்தியுள்ளனர்.

மீண்டும் உதவி கேட்டும் அவர்கள் செய்யாத நிலையில் நிக்கோல் உடனடியாக பொலிசை அழைத்திருக்கிறார்.இதற்காக நிக்கோலிடம் மன்னிப்பு கூறியிருக்கிறது நோவா ஸ்காட்டி ஹெல்த் ஆணையம். தங்களது நோயாளிகளையோ அல்லது அவர்களின் குடும்பத்தையோ படம்பிடிக்க இங்கு அனுமதி முழுவதுமாக மறுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் இந்த மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் கிரெக் பூன்.

இந்த நிகழ்வு பற்றி நிக்கோல், தன்னை வீடியோ எடுத்த நபரின் நோக்கம் தனக்குப் புரியவில்லை என்றும், அதை கேட்ட போது தான் பாலியல் ரீதியான துன்பத்தை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையின் போக்கால் மிகுந்த மனவருத்தத்துடன் இருக்கும் நிக்கோலை அவரது கணவரும், நண்பர்களும் குடும்பத்தினரும் தேற்றி வருகின்றனர்.