100 ஆண்கள் இருப்பார்கள் ரெண்டே ரெண்டு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க : வசுந்தரா ஓபன்டாக்!!

1761

வசுந்தரா ஓபன்டாக்

நடிகர் விஜய் சேதுபதியின் முதல் படமான தென்மேற்கு பருவக்காற்றில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வசுந்தரா காஷ்யப். இவரது நடிப்பில் சமீபத்தில் கண்ணே கலைமானே படம் வெளியான நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் பேசுகையில், ஒரு பெண் சினிமா இண்டஸ்ரிக்குள் நீண்ட காலம் இருப்பது மிக கடினம். ஏன் இருக்கவே முடியாது என்று கூட சொல்லலாம். நயன்தாரா மேம் எல்லாம் எப்படி தான் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இப்போதாவது பரவாயில்லை, இதற்கு முன்பெல்லாம் பட ஷூட்டிங் நடக்கிறது என்றால் அங்கு 100 ஆண்கள் இருப்பார்கள், ஆனால் நடிகை, நடிகை அம்மா என இரு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க.

காடுகளில் படப்பிடிப்பு நடக்கும்போது நம்மளுடன் நடிகைகளும் வருகிறார்கள் என்று கழிப்பிடத்திற்கு தயார் எல்லாம் எல்லா தயாரிப்பாளர்களும் செய்வதில்லை. அந்த மாதிரியான நேரங்களில்(மாதவிடாய்) நாங்கள் இயக்குனரிடம் விஷயத்தை சொன்னாலும் அது எல்லா இயக்குனருக்கும் புரியாது என்றார்.