நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

1084

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் இவரும் ஒருவராக வலம் வருகிறார்.

இவர்மீது பலமுறை குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பெண்களுடன் உல்லாசமாக உள்ளதாக பல காணொளிகளையும் வெளியிட்டனர். ஆனாலும் அவரை தேடி அவரது பீடத்திற்கு பக்தர்கள் ஏராளக்கணக்கில் சென்றுவருகின்றனர்.

பெங்களூரில் உள்ள இவரது தியான பீடத்தில் சேர விரும்புபவர்களுக்கு 2,000 முதல் 25,000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இன்றைய நாளில் இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலர் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் இவர் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியானங்கள் பிரபலமாக உள்ளது. இவர், தனது சொற்பொழிவுகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதுவரை, 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளாராம்.