நடிகை யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு குத்து என்றாலே உடனே அனைவரது ஞாபகத்திற்கும் வருவது அப்படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் தான். இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து வந்த பேராதரவினால் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் மஹத்திற்கு ஜோடியாக புதியதொரு படத்தில் நடித்து வரும் இவர் மருத்துவ கல்லூரி மாணவியாக மற்றொரு படத்தில் நடித்துள்ளதை இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு கூறியுள்ளார்.
யோகிபாபு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் ஜூம்பி படத்தில் தான் யாஷிகாவிற்கு இந்த மருத்துவ கல்லூரி மாணவி வேடம்.