தந்தை பாலியல் தொல்லை கொடுக்கிறார் : கணவருடன் இளம்பெண் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு!!

815

பாலியல் தொல்லை

தமிழகத்தில் தந்தை பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் கணவருடன் சேர்ந்து புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண் தனது கணவருடன் காவல் நிலையத்துக்கு வந்து புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், என் தந்தை பாண்டிமுத்துவும், என் தாயாரும் பிரிந்து வாழ்கின்றனர் என் இரண்டு சகோதரிகள் திருமணமாகி வெளியூரில் இருக்கும் நிலையில் நான் தந்தையுடன் வசிக்கிறேன்.

அப்பா நடத்தையில் சந்தேகம் வரவே, என்னை மூத்த அக்கா சென்னைக்குக் கூட்டிச்சென்றார். தற்போது, கோவில் திருவிழா வந்ததால் நேர்த்திக்கடன் செலுத்த என்னை அவர் ஊருக்கு அழைத்து வந்தார். பின்னர் என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து தந்தை பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்தார்.

திருமணம் ஆகும் வரை ஆசைக்கு இணங்க அவர் வற்புறுத்தியதற்கு நான் மறுத்ததால் என்னை அடித்து சித்ரவதை செய்ததோடு வீட்டை விட்டு வெளியேற விடவில்லை.

பின்னர் என் அக்கா என்னை மீட்டார். இதற்காக, பாண்டியன் என்பவர் உதவியாக இருந்தார். என் பிரச்சனையை அறிந்து அவர் என்னை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் என் தந்தை பாண்டிமுத்து எங்கள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.