மனைவியை கட்டி வைத்து சரமாரியாக கத்தியால் குத்தி உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன்!!

658

தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன்

புதுச்சேரியில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜெயநாதன் (50) – வனஜா (40) தம்பதியினர். இவர்களுக்கு பன்னீர்செல்வநாதன் என்கிற மகன் இருக்கிறான். கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால், 2 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து வனஜா தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் மனைவியின் வீட்டிற்கு சென்ற ஜெயநாதன், சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மகன் கல்லூரிக்கு சென்ற நேரம் பார்த்து மீண்டும் கணவன் – மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஜெயநாதன் திடீரென வனஜாவை தாக்கியுள்ளார். வலிதாங்க முடியாமல் தப்ப முயன்ற மனைவியை, ஏணிப்படிக்கட்டில் கட்டி வைத்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

அதன்பிறகும் ஆத்திரம் தீராத ஜெயநாதன் மோட்டார் சைக்கிளுக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மனைவியை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்துள்ளார்.

இதில் அலறியபடியே வனஜா துடிதுடித்து இறந்துள்ளார். இவர்களுடைய வீடு அப்பகுதியில் தனியாக இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு இந்த சத்தம் கேட்கவில்லை என தெரிகிறது.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், கருகிய நிலையில் கிடந்த வனஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.