திருமணத்துக்கு முந்தையநாள் பிச்சையெடுக்கும் மணமகன் : என்ன காரணம் தெரியுமா?

818

பிச்சையெடுக்கும் மணமகன்

தமிழகத்தின் மதுரையில் வாழும் ஒரு பிரிவினர் தங்கள் வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் போது மணமகனை குலசாமியாக அழகு பார்ப்பார்கள் என தெரியவந்துள்ளது.

மதுரையில் வாழும் சௌராஸ்ட்ரா மக்களில் முசுவாதி என்ற வீட்டுப் பெயரைக் கொண்டவர்கள் தங்கள் வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் போது முதல் நாள் மணமகனை நன்கு அலங்கரித்து அதாவது முகத்தில் திருநீறு மற்றும் கண் மை பூசி தங்கள் குலசாமி யாக அழகு பார்ப்பார்கள்.

பின்பு பொங்கல் படையலிட்டு சாமி கும்பிட்ட பின்பு மணமகன் பட்டினபிரவேசம் என்ற நகர்வலம் வந்து பிச்சை எடுக்க வேண்டும். அப்போது உறவினர்கள் பாதாபிசேகம் செய்து வணங்குவர். மணமகனிடம் அனைவரும் வயது வித்தியாசம் இன்றி ஆசி பெறுவார்கள்.

பின் மண்டபம் திரும்பிய பின் பெற்றக் காணிக்கை யில் ஒரு பகுதி திருமண செலவாக வைத்துக்கொள்ளப்படும். மீதம் சாமிக்கு சேர்க்கப் படும். இந்த வழக்கம் இன்றும் அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.