கையில் பணத்துடன் கண்கலங்கி நின்ற சிறுவன் : இணையத்தில் வைரலான புகைப்படம்!!

623

வைரலான புகைப்படம்

மிசோரம் மாநிலத்தில் கையில் பணம் மற்றும் கோழிகுஞ்சுடன் மருத்துவமனையில் நிற்கும் சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டை சேர்ந்தவரின் வளர்ப்பு கோழிக்குஞ்சின் மீது ஏற்றிவிட்டார்.

இதில் காயம்பட்ட அந்த கோழிகுஞ்சுடன் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பணத்தை கொடுத்து கோழிக்குஞ்சை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதனை அங்கிருந்த ஒரு ஊழியர் படமாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.