வீங்கிக் கொண்டே சென்ற இளம்பெண்ணின் வயிறு : கர்ப்பமாக இருப்பதாக நினைத்த குடும்பத்தார் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!

878

காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவை சேர்ந்த அழகிய இளம்பெண்ணின் வயிறு பெரிதாக வீங்கி கொண்டே சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தார் நினைத்த நிலையில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

அபி கிறிஸ்வெல் (21) என்ற இளம் பெண்ணின் வயிறு கடந்த 2017 டிசம்பரில் வீங்க தொடங்கியது. மேலும் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது, இதையடுத்து அபி கர்ப்பமாக இருப்பதாக அவரின் குடும்பத்தினர், நண்பர்களும் நினைத்தனர்.

பின்னர் மருத்துவர்களிடம் சென்றபோது அவர்களுக்கும் அபி கர்ப்பமாக இருக்க தான் வாய்ப்பு அதிகம் என தொடர்ந்து அதற்கான பரிசோதனையை செய்து வந்தனர். ஆனால் அபி தொடர்ந்து தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இப்படியே 6 மாதம் வரை சென்ற நிலையில் இனியும் வலியை பொறுக்க முடியாது என அபி வேறு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அபிக்கு பல்வேறு விதமான பரிசோதனைகளுடன், நிறைய ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அப்போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர், காரணம் அபிக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதும், அவர் வயிற்றில் 2.2 கிலோ எடையுடைய புற்றுநோய் கட்டி இருப்பதும் தெரியவந்தது.

இந்த கட்டி தான் அவரின் வயிற்றை வீங்க வைத்து கர்ப்பிணி போல வெளியில் காட்டியுள்ளது. இதற்கான சிகிச்சையை தொடர்ந்து அபி எடுத்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வயிற்றில் இருந்த கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது.

இதன் பின்னர் தொடர் சிகிச்சையால் அபி புற்றுநோயிலிருந்து தற்போது மீண்டுள்ளார். அபி கூறுகையில், எல்லோரும் என் வயிறு வீங்கியதை பார்த்து நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்தார்கள், ஆனால் எனக்கு மட்டும் வேறு எதோ பிரச்சனை உள்ளது என்றே தோன்றியது.

அதற்கேற்றார் போலவே பெரிய கட்டி வயிற்றில் இருப்பது தெரியவந்தது. கட்டியை வெளியில் எடுத்த போது அது பெரிய உருண்டை அளவில் இருந்தது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நோய் காரணமாக என் தலைமுடியை இழந்து மிகவும் சிரமப்பட்டேன், எப்படியோ நோயிலிருந்து மீண்டது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.