தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி : அவர் காலில் எழுதியிருந்த அந்த வார்த்தை… அதிர்ச்சித் தகவல்!!

1092

தற்கொலை செய்துகொண்ட சிறுமி

பிரித்தானியாவை சேர்ந்த பள்ளி சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் முன்னரே பதிவிட்டது தெரியவந்துள்ளது.

Warrington நகரை சேர்ந்தவர் ஜெசிகா ஸ்கேடர்சன் (12). பள்ளி மாணவியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிக்கூடத்தில் சில பேர் ஜெசிகாவை கிண்டலடித்ததோடு, அவரை தாக்கியதால் இம்முடிவுக்கு ஜெசிகா வந்தார் என தெரியவந்தது. இதனிடையில் இறப்பதற்கு முன்னர் தனது வலது காலில் ஜெசிகா RIP என பேனாவால் எழுதியிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் காலில் எழுதியிருந்த அந்த வார்த்தையை ஜெசிகா புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது, இதோடு தான் தற்கொலை செய்வது தொடர்பாக ஓவியங்கள், கடிதங்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்ட ஜெசிகா தன்னை பள்ளியில் தொந்தரவு செய்த நபரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெசிகா, உடன் படித்த மாணவ, மாணவிகளுடன் வேண்டுமென்றே சண்டை போட்டாரா மற்றும் பிரச்சனையை முதலில் தொடங்கியது யார் என்பது குறித்து தெளிவான விபரம் தெரியவில்லை.

இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஜெசிகாவுக்கு தாய் இல்லாத காரணத்தால் அவரை உடன் படித்தவர்கள் கிண்டலடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதோடு எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என இணையத்தில் ஜெசிகா முன்னர் தேடியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.