திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்த புதுமணத்தம்பதி : வைரலாகும் புகைப்படங்கள்!!

476

வைரலாகும் புகைப்படங்கள்

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த புதுமண தம்பதி திருமணம் முடிந்த கையோடு வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், ஒடிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடக்கும் வாக்கு சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் புதுமண தம்பதி வந்து வாக்களித்தனர்.

திருமணம் முடிந்த கையோடு, இருவரும் வந்து வாக்களித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.