மணப்பெண் இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை… என்ன காரணம்? நெகிழ்ச்சி சம்பவம்!!

957

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் மகனின் திருமண ஆசையை நிறைவேற்றிய தந்தையின் செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் பரோட். 27 வயதாகும் இவர் மனவளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது சகோதரனின் திருமணத்தைக் கண்ட அஜய்பரோட், இது போன்ற திருமண விழா தனக்கு நடக்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். அதன் படி அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அஜய்க்கு திருமண ஏற்பாடுகளை தந்தை செய்துள்ளார்.

இதனால் ஒரு திருமணம் என்றால் என்னென்ன நடக்குமோ மெகந்தி நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என திருமண விழா நடைபெற்றுள்ளது. திருமண விழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து அஜயின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

மற்றவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடையும் அஜய், அவனது திருமணம் குறித்து என்னிடம் கேட்டான். என்னால் எந்த பதிலும் சொல்லமுடியவில்லை. அவனுக்கு ஏற்ற ஜோடியை கண்டுப்பிடிப்பது கடினமானதாக இருந்ததால், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து அஜய்க்கு திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.

அதன் படி அவனது ஆசை நிறைவேற திருமணம் செய்து வைத்தோம். இந்த சமூகம் என்ன சொல்லும் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் என் மகனின் கனவை நிறைவேற்றி இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.