வங்கியிலிருந்து வந்த போன் கால்… தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த தாய், மகள்!!

731

வங்கியிலிருந்து வந்த போன் கால்.

கேரளாவில் கடன் கொடுத்த வங்கியிலிருந்து மிரட்டல் விடுத்ததால் 19 வயது மாணவி தனது தாயாருடன் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன் . இவரது மனைவி லதா. இந்த தம்பதிகளுக்கு வைஷ்ணவி என்ற 19 வயது மகள் இருக்கிறார். வைஷ்ணவி தனியார் கல்லூரியில் BBA படித்து வந்தார். இந்நிலையில், வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த சந்திரனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதற்கிடையில், இவர்கள் வீடுகட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஒரே மகள் என்பதால் எல்லாமே மகள் பெயரிலேயே செய்வது தான் தம்பதியின் வழக்கம். அதனால், புதிய வீட்டையும் `வைஷ்ணவி ‘ என்ற பெயரிலேயே ஆசை ஆசையாகக் கட்டி வந்தனர்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார் சந்திரன். இதையறிந்த கனரா வங்கி ஊழியர்கள், மகள் பெயரில் கட்டி வரும் வீட்டுக்கு ரூ.8 லட்சம் செலுத்தியுள்ள நிலையில், மேலும் ரூ.6.80 லட்சம் செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால், சந்திரன் மகள் பெயரில் தாங்கள் கட்டி வந்த வீட்டையும் அதைச் சுற்றி நிலத்தையும் விற்க ரூ. 24 லட்சத்துக்குப் பேரம் பேசியுள்ளார். தங்களுக்குச் சொந்தமான நிலத்தை விற்று மே 14-ம் தேதி கடனை அடைத்து விடுவதாகச் சந்திரனின் மனைவி லேகா வங்கி அதிகாரிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், சொன்னபடி, மே. 14 ஆம் திகதி அவர்களால் குறித்த நிலத்தை விற்று பணம் கொடுக்க முடியவிலை. இதனால், வங்கி ஊழியர்கள் தங்களின் சொத்துக்களை கைப்பற்றப் போவதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாகவும் போன் செய்து லதாவை மிரட்டியுள்ளனர்.

இதனால், மிகுந்த மனவேதனையிலிருந்த லதா தனது மகள் வைஷ்ணவியுடன் தீக்குளித்து தற்கொலை முயற்சித்துள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் லதாவையும், வைஷ்ணவியையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

வழியிலேயே வைஷ்ணவி மரணமடைந்தார். லேகா 90 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.வங்கி அதிகாரிகள் செய்த டார்ச்சரால் தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.