வெளிநாட்டு வேலையை நம்பி சென்ற இளைஞரின் பரிதாப நிலை : கண்ணீர் விட்டு கதறிய வீடியோவின் சோகப் பின்னணி!!

1446

இளைஞரின் பரிதாப நிலை

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கதறிக் கொண்டே பேசும் வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஷமீர். 21 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.

அப்போது இவரிடம் ஏஜெண்ட் பண்ணை வீட்டில் வேலை என்று கூறியதால், மிகவும் மகிழ்ச்சியுடன் சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்துள்ளது. ஏனெனில் பண்ணை வீட்டில் வேலை என்று சொன்ன இடத்தில் இருந்து சுமார் 1200 கி.மீற்றர் தூரத்தில் உள்ள பாலைவனத்தில் ஆடுகளை 300 செம்மறி ஆடுகளை மேய்க்க கூறியுள்ளனர்.

அப்போது அவர் நான் ஆடு மேய்க்க வரலை. எனக்கு பண்ணை வீட்டுலதான் வேலை என்று சொன்னார்கள் நான் இதை பண்ண மாட்டேன் என்று கூற, ஆத்திரமடைந்த உரிமையாளர் , அவரை சரமாரியாக அடிக்கத் துவங்கியுள்ளார்.

நான் சொன்னதை செய் இல்லையென்றால் எச்சரித்துவிட்டு சென்றுள்ளார். கடும் வெயிலில் ஆடு மேய்ப்பது என்பது என்பது எளிதான காரியமில்லை என்பதை உணர்ந்து செல்போன் வீடியோ வில் தன் நிலையை விவரித்து தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அதில், கண்கலங்கிய நிலையில் பேசிய அவர், ஏஜெண்ட் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். சொன்ன வேலை ஒன்று, கொடுத்த வேலை ஒன்று. கடுமையான சித்தரவதைகளைச் சந்தித்து வருகிறேன்.

கடந்த 20 நாட்களாக நான் பட்டினியாகக் கிடந்து கொடுமைகளை அனுபவிக்கிறேன். இங்கு என்னால் வாழ முடியாது. ஆனால், நான் செத்தாலும் கவலை இல்லை என்று அவர்கள் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் என்னை மிரட்டிவிட்டு செல்கிறார்கள். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சிர்சிலா எம்எல்ஏ கே.டி.ராமாராவ், இதுபற்றி ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளோம். இதனால் எவ்வளவு விரைவாக அவரை தாயகத்திற்கு கொண்டு வர முடியுமோ அந்தளவிற்கு முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.