நான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா!

522

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு தமிழ் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா என தென்னிந்தியா முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது.இந்நிலையில் சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா தான் ஸ்டுடியோ க்ரீன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.

இந்த நிறுவனத்தில் கீழ் தான் பல படங்களில் சூர்யா நடித்தார்.தற்போது ஒரு நிகழ்ச்சியில் ஞானவேல்ராஜா பேசுகையில் ‘தெலுங்கில் எல்லாம் நடிகர்களின் படங்கள் ரூ 100 கோடி வரை ஷேர் கிடைக்கின்றது.ஆனால், அவர்கள் சம்பளம் ரூ 15 கோடி தான் இருக்கும், தமிழில் நடிகர்களின் சம்பளமே ரூ 50 கோடி உள்ளது.

எடுத்த அனைத்து படமும் நஷ்டம் தான் அடைகின்றது, இதற்கு நடிகர்கள் கண்டிப்பாக சம்பளத்தை குறைக்க வேண்டும்.அப்படி இல்லை என்றால் நான் தெலுங்கு பக்கம் சென்று விடுவேன்’ என்று மிகவும் ஆதங்கமாக பேசினார்.