வரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்!!

656

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வரதட்சணை கொடுக்காததால் கணவன் தன் புதுமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அசாம் மாநிலத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஒரு ஜோடியினருக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகும் பெண்வீட்டார் பேசிய படி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரத்தில் புது மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தனது 2 நண்பர்களோடு சேர்ந்து தனது புது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கணவர் மற்றும் அவரது நண்பர்களிடமிருந்து தப்பித்த புதுப் பெண் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய புது மாப்பிள்ளையையும் அவரது இரு நண்பர்களையும் கைது செய்து அவர்களுக்கெதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.