வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?… அதற்கு இது போதுமே!

1072

இன்று புற்றுநோய் ஒருவரை எப்போது தாக்குகிறது என்று தெரிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய மோசமான வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான். இவற்றால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, பல நோய்களின் தாக்குதல்களுக்கு உடலை உள்ளாக்குகிறது. முக்கியமாக ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், அந்த ஒரு விஷயத்தாலேயே புற்றுநோய் சீக்கிரம் வந்துவிடும்.

ஆனால் இன்று மார்கெட்டில் கிடைக்கும் பல உணவுகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் சக்தி உள்ளது என்று தெரியுமா? சொல்லப்போனால் நம் உடல் அன்றாடம் தொடர்ச்சியாக புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடிக் கொண்டு தான் உள்ளது. இதற்கு நம் உடலுக்கு குறிப்பிட்ட நொதிகள், புரோட்டீன்கள் போன்றவை அவசியம். இவைகள் குறிப்பிட்ட உணவுகளில் உள்ளது.

இந்த உணவுகளை ஒருவர் அன்றாடம் உட்கொண்டு வந்தால், நிச்சயம் புற்றுநோய் தாக்கத்தைத் தடுக்கலாம். ஏனெனில் இந்த உணவுகளில் சக்தி வாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. எனவே இந்த உணவுகளை அவ்வப்போது உட்கொண்டு வர, புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அதோடு இந்த உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு, உடலினுள் ஏற்பட்ட அழற்சியையும் குறைக்கும்.

க்ரீன் டீ:க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் நொதிகளுக்கு தேவையானதாகும். முக்கியமாக இந்த பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ஆரோக்கியமான செல்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், புற்றுநோய் செல்களை அழிக்கும். அதிலும் ஒரு நாளைக்கு 3 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், அதுவும் மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் குடித்தால், புற்றுநோயின் பெருக்கத்தைத் தடுக்கலாம்.

திராட்சை:ரெஸ்வெராட்ரல் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்க்கும். இது திராட்சையின் தோல், மாதுளை போன்றவற்றில் அதிகம் உள்ளது. இந்த ரெஸ்வெராட்ரல் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்பு போன்றது. உடலில் அழற்சி தீவிரமாகும் போது புற்றுநோய் வரக்கூடும். ஆனால் ஒருவர் திராட்சையை தோலுடன் சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.

தக்காளி:தக்காளியை ஒருவர் சாப்பிட்டு வந்தால், அதுவும் ஆண்கள் சாப்பிட்டு வந்தால் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தக்காளி செல்களில் உள்ள டிஎன்ஏ-விற்கு பாதுகாப்பு படலம் போன்று செயல்பட்டு, புற்றுநோய் வருவதைத் தடுக்கும். மேலும் தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் இது உடலில் லைகோபைன் மற்றும் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை எதிர்க்கும் பண்புகளையும் உறிஞ்சச் செய்யும். எனவே தக்காளியை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோயின் அபாயமும் குறையும்.

கானாபிஸ் ஆயில்:கானாபிஸ் ஆயில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி வாய்ந்த ஒரு உணவுப் பொருள். இது உடலில் கேனாபினாய்டின் செயல்பாட்டை அதிகரிக்கும். கேனாபினாய்டு நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இந்த எண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலம், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

ஸ்பைரூலினா:புற்றுநோய் நோயாளிகளுக்கு ஸ்பைரூலினா சப்ளிமெண்ட்டுகள் மிகவும் நல்லது. இந்த சிறிய வகை கடற்பாசியில் குளோரோபில் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. அதோடு இந்த வகை கடற்பாசியில் வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிகமாக உள்ளது. எனவே இந்த சப்ளிமெண்டுகளை ஒருவர் அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி:இந்த காய்கறிகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளது. அத்துடன் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் டிஎன்ஏ பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, கார்சினோஜென்களை செயலிழக்கச் செய்து, புற்றுநோய் செல்களை அழியச் செய்து, இரத்த நாளங்களில் கட்டிகள் உருவாகி வளர்ச்சி அடைவதைத் தடுக்கும்.

பூண்டு:பல்வேறு ஆய்வுகளில் பூண்டை ஒருவர் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களான குடல், உணவுக்குழாய், மார்பகம், கணையம் மற்றும் வயிறு போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினமும் உங்களது உணவில் பூண்டுகளை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

மஞ்சள்:மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் பலர் கண்டறிந்துள்ளனர். பல ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், உங்கள் உணவில் மஞ்சள் தூளை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

கடல் காய்கறிகள்:கடல் காய்கறிகளான கல்ப், வகாமி, அராமி, நோரி மற்றும் கொம்பு போன்றவற்றில் கனிமச்சத்துக்களான மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் அயோடின் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இந்த கனிமச்சத்துக்கள் அனைத்துமே புற்றுநோயை சரிசெய்யத் தேவையான சத்துக்களாகும். முக்கியமாக இந்த காய்கறிகள் குடல் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயை சரிசெய்யும்.

காளான்:அனைத்து வகையான காளான்களுமே புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும். ஆய்வு ஒன்றில் காளான் மார்பகம், நுரையீரல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உணவுப் பொருளாக கண்டறியப்பட்டுள்ளது.