தந்தை வயது நபருடன் 19 வயது பெண்ணுக்கு திருமணம்: பெற்றோர் நடத்திய அவலம்

642

இந்தியாவில் 19 வயதுடைய இளம் பெண்ணை 46 வயதுடைய நபருக்கு, பெண்ணின் பெற்றோரே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் உத்தம் விட்டல் கலி (46). பள்ளிக்கூட ஆசிரியரான இவர் சமீபத்தில் 19 வயதுடைய இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார்.

உத்தம், பெண்ணின் பெற்றோரிடம் பண ஆசை காட்டிய நிலையில், அவர்களே தங்கள் மகளை உத்தமுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.இந்நிலையில் இது குறித்து இளம் பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மார்ச் 22-ஆம் திகதி உத்தமுடன் எனக்கு கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டது, உத்தமுக்கு ஏற்கனவே திருமணமாகி டீன் ஏஜ் பருவத்தில் மகள் உள்ளார்.

ஆனால் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக என்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.இது சம்மந்தமாக உத்தம் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய பெண் கோரியுள்ளார்.இதையடுத்து பொலிசார் உத்தமை கைது செய்த நிலையில், பெண்ணின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.