உனது மரணத்தை நம்ப முடியவில்லை… தேனிலவு முடித்து திரும்பும் வழியில் மரணமடைந்த புதுமண தம்பதி : கதறும் குடும்பம்!!

1118

மரணமடைந்த புதுமண தம்பதி

கேரளாவில் தேனிலவு முடித்து ஊருக்கு திரும்பிய புதுமண தம்பதிகள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் குடியிருக்கும் 31 வயதான கிரண் மற்றும் அவரது மனைவி 28 வயதான ஜின்ஸி ஆகியோரே சாலை விபத்தில் கொல்லப்பட்டவர்கள். நீண்ட பல ஆண்டுகளாக காதலித்துவந்த இருவரும் கடந்த மாதமே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் தேனிலவு கொண்டாடும் வகையில் தங்களது வாகனத்தில் சென்றுள்ளனர். இவர்களுடன் நண்பர் ஜயதீப் மற்றும் அவரது மனைவியும் பெங்களூருவில் இருந்து திரும்பியுள்ளனர்.

இந்த நிலையிலேயே மாண்டியா பகுதியில் வைத்து இவர்களது வாகனம் சாலை விபத்தில் சிக்கியுள்ளது. இதில், கிரண் மற்றும் அவரது மனைவியுடன் நண்பரும் அவரது மனைவியும் உள்ளிட்ட நால்வரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இழப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரணின் நண்பர்கள், உனது இறப்பை எங்களால் நம்ப முடியவில்லை, இந்த வலி காலங்கள் கடந்தும் எங்களிடம் தங்கும் என கண்ணீருடன் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.