கழுத்தில் தாலி ஏறும் வரை கலங்கிய கண்களுடன் தந்தை தேடிய மகள் …சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்!!

656

சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்

கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (வயது 55) திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு 3 பிள்ளைகளில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இறுதியாக இளைய மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கொல்லத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் நிச்சயம் செய்யப்பட்டது. கடைசி மகளின் திருமணம் என்பதால் செலவைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடைபெற்ற வேளையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் பாடகர்கள் பாடிக்கொண்டிருந்த வேளையில் விஷ்ணுபிரசாத் நன்றாக பாடகூடியவர் என்பதால் நண்பர்கள் சிலர் அவரையும் பாடல் பாடும்படி கூறி அவரும் அதை ஏற்று ஒரு பாடலை உற்சாகமாக பாடத் தொடங்கி சிறிது நேரத்திலேயே அவர் மேடையில் மயங்கி சரிந்துள்ளார்.

இதனால் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்றும் தந்தையின் நிலையைப் பார்த்து ஆர்ச்சாவும் கதறி அழுதார்.

இதனை கண்ட உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறிய நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தொடரும்படி கூறிவிட்டு, உடனடியாக விஷ்ணுபிரசாத்தை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அதன் பினனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

மறுநாள் திருமணம் என்ற நிலையில் விஷ்ணுபிரசாந் த் இறந்த தகவலை அவரது மகளிடம் தெரிவித்தால் அவரால் அந்த துக்கத்தை தாங்க முடியாது என்பதாலும் அதன் மூலம் விஷ்ணுபிரசாத் தனது மகளுக்கு நடத்த திட்டமிட்ட திருமணம் தடைபடும் என்பதாலும் அந்த தகவலை ஆர்ச்சாவிடம் தெரிவிக்காமல் மறைக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஆர்ச்சாவிடம் தந்தை நலமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு அவர் வந்துவிடுவார் என்று கூறி சமாதானம் செய்தனர். தனது கழுத்தில் தாலி ஏறும் வரை தந்தை திருமண மண்டபத்திற்கு வரவில்லை என்பதால் அவரை மகள் கலங்கிய கண்களுடன் தேடிக் கொண்டே இருந்தார். மணமகனும், உறவினர்களும் அவரது தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி திருமணத்தை நடத்தி முடித்தனர்.

இறுதியாக ஆர்ச்சாவிடம் அவரது தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டு ஆர்ச்சா கதறி அழுது உள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.