அன்மோள்..
இந்தியாவின் மும்பை நகரில் தந்தையால் அமில தாக்குதலுக்கு இரையான பெண் ஒருவர் தமக்கு மொடலாக வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் குடியிருக்கும் அன்மோள் என்பவருக்கு பிறந்த இரண்டாவது மாதமே தந்தையால் வாழ்க்கையே தலைகீழானது. தாயாரின் மடியில் இருந்த அன்மோளின் முகத்தில் சொந்த தந்தையே அமிலம் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் அன்மோளின் தாயார் குற்றுயிராக மீட்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்தக் கொடூர தாக்குதலானது தன்மீதல்ல, தமது தாயாரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது அன்மோளுக்கு தெரியவந்தது.
பின்னர் 5 ஆண்டு காலம் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார் அன்மோள். தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமே அவரை அனாதைகள் இல்லத்தில் சேர்ப்பித்துள்ளது. அங்குதான் அன்மோளுக்கு அன்பின் உலகம் என்ன என்பது தெரியவந்தது. ஆனால் வெளியுலகம் அவரை ஏளனம் செய்தது.
இருப்பினும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த அன்மோள், தற்போது அமில தாக்குதலுக்கு இரையானவர்களை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். 23 வயதாகும் அன்மோள் தமக்கு மொடலாகும் ஆசை இருப்பதாகவும், அதை நிறைவேற்றும் எண்ணத்துடன் முன்செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.