என் மகளை நடிகை வனிதா விஜயகுமார் கடத்தி சென்றுவிட்டார் : கதறும் கணவன்!!

980

வனிதா விஜயகுமார்

மகளை பராமரிப்பது தொடர்பான வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில் அது தொடர்பில் பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தொடர்ந்து எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.

ஆனந்தராஜ் மகளை தன்னுடன் ஐதராபாத்திற்கு அழைத்து சென்று வளர்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு வனிதா விஜயகுமார் ஐதராபாத் சென்று தன்னுடைய மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். இதை அறிந்த ஆனந்தராஜ் தன்னுடைய மகளை வனிதா விஜயகுமார் கடத்தி சென்று விட்டதாக ஐதராபாத் பொலிசில் புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து வனிதா திருவள்ளூர் நீதிமன்றத்தில் தன்னுடைய மகளுக்கு தான்தான் பாதுகாப்பு அளிப்பதாக கூறி தன் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக நடிகை வனிதா திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

விசாரணைக்காக அவரது கணவர் வராததால் தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. பின்னர் வெளியே வந்த வனிதா நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய மகளை நானே என் முழு பராமரிப்பில் வைத்து கொள்ளவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டேன், நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.