வெளியில் சென்ற கணவன் : 2 மகள்களுடன் வீட்டில் இருந்த இளம்தாய்க்கு நேர்ந்த கதி!!

513

வீட்டில் இருந்த இளம்தாய்க்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் பல்லி விழுந்த குளிர் பானத்தை அருந்திய தாய், மகள்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (33) விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி (29) என்ற மனைவியும், பெபினா (7), பிருந்தா (5) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாரிமுத்து வெளியில் சென்ற நிலையில், முத்துலட்சுமி வீட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி வந்தார். பின்னர் குளிர்பானத்தை அருந்திய முத்துலட்சுமி தனது மகள்களான பெபினா, பிருந்தா ஆகியோருக்கும் குளிர்பானத்தை குடிக்க கொடுத்தார். குளிர்பானம் அருந்திய சிறிது நேரத்தில் முத்துலட்சுமிக்கும், அவரது மகள்களுக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே குளிர்பான பாட்டிலை பார்த்த போது அதில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது.

பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை அருந்தியதாலேயே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.